இலைக்கும், குக்கருக்கும் சண்டை, ரத்த உறவை, ரத்தத்தின் ரத்தங்களை வைத்தே மிரட்டுறாங்களாம். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில சட்டமன்ற வேட்பாளராக திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள்னு பலபேரு மனு தாக்கல் செஞ்சிருக்காங்க. இதுல, அதிமுகவுல வீரமானவர் அந்த தொகுதியில வேட்பாளராக களமிறங்கியிருக்காரு. அவரை எதிர்த்து, அவரது ரத்த உறவான அக்கா மகன் தென்னரசு சாம்ராஜ் என்பவரும் குக்கர் சின்னத்துல களமிறங்கியிருக்காராம்.
இதனால் தென்னரசு சாம்ராஜ் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வர்றாராம். வாக்கு சேகரிக்க போற இடத்துல, இலை கட்சிக்காரங்க அவருக்கு மிரட்டல் விடுக்குறாங்களாம். 8 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவர் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கால்வாய் வசதி, மின்சார வசதின்னு எந்த வசதியையும் ஏற்படுத்தித் தரவே இல்ல. இந்த நிலையில இலைகட்சிக்காரங்க மிரட்டுறதாக, ரத்த உறவினரே புலம்பி வர்றாரு. சில நாட்களுக்கு முன்னாடி, ஜோலார்பேட்டை தொகுதியில் குக்கர் கட்சி வேட்பாளருக்கு பிரசார வாகன உரிமையாளரை வீடு தேடி சென்று மிரட்டி பிரசார வாகனம் வராமலே தடுத்துட்டாங்களாம். இதனால மாற்று பிரசார வாகனம் ஏற்பாடு செஞ்சி வர்றாங்களாம். இப்படி வீரமான வேட்பாளர் ரத்த உறவை, ரத்தத்தின் ரத்தங்களை வைத்து மிரட்டி வர்றாராம்.